Sunday, December 26, 2010

மன்மதன் அன்பு படத்தில் செருப்படி வாங்கிய ஈழத் தமிழன்

தெனாலியில் ஈழத் தமிழனை பயந்தாங்கொள்ளியாக காட்டி சந்தோஷப்பட்ட கமல், மன்மதன் அம்புவில் அவனை செருப்பால் அடித்திருக்கிறார். அதுவும் ஒரு நடிகையின் கையால்.


ஏர்போர்ட்டில் வந்திறங்கும் த்ரிஷாவை ஈழத் தமிழரான டாக்சி டிரைவர் ஒருவர் சந்திக்கிறார். "மேடம்! உங்க கால் செருப்பாகக்கூட நடிக்கத் தயாராக இருக்கேன்" என்று வாலண்ட்ரியாக முன் வந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் இதே ஈழத் தமிழர், த்ரிஷாவிடம் செருப்படியும் வாங்குகிறார். அப்போது, "மேடம்! உங்க செருப்பாகூட நடிக்கத் தயார்னுதான் சொன்னேன். செருப்படி வாங்கறேன்னு சொல்லலை" என்று மீண்டும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்கிறார். இதற்கு முன்பாக, இதே நபர் டோப்பா(விக்) தலையுடன் வந்து அதுவும் கழற்றப்பட்டு அவமானப்படுகிறார்.

 ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா?


 



7 comments:

  1. வாழும் ஈழத்தமிழர்களில் காட்டிக்கொடுப்பவர்கள் கூட்டிக்கொடுப்பவர்கள் எல்லாம் இருக்கலாம். பதவிக்காக துரோகம் செய்பவர்கள் இருக்கலாம். ஆனால் பயந்தாங்கொள்ளியாக, செருப்படி வாங்கும் ஒரு நிழல் கேரக்டராக ஒரே ஒரு ஈழத்தமிழ் பேசுபவனை சினிமாவில் காண்பித்தால் உடனே சூடு சொரணை எல்லாம பொங்குகிறதோ? ஆமாம் எல்லா ஈழத்தமிழனும் வீராதி வீரன்தானா? பயந்த சுபாவம் கொண்டவர்கள் இருக்க வாய்ப்பே இல்லையா? சினிமா நடிகர்களுக்கு செருப்பாய் உழைக்க தயாராய் ஒரே ஒரு ஈழத்தமிழன் கூட கிடையாதா? முதலில் இந்த தொட்டாச்சிணுங்கித்தனத்தை விட்டு வெளியே வர பாருங்கள்.

    ReplyDelete
  2. // ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா? //

    நல்ல நகைச்சுவை. லாஸ் ஏன்ஜலீஸில் தமிழ் படஙகள் வெளியிட்டு கல்லா கட்டுபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் அய்யா ஈழத்தமிழர்கள்.

    ReplyDelete
  3. // ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா? //

    நல்ல நகைச்சுவை. லாஸ் ஏன்ஜலீஸில் தமிழ் படஙகள் வெளியிட்டு கல்லா கட்டுபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் அய்யா ஈழத்தமிழர்கள்.

    ReplyDelete
  4. இப்படியான காட்சிளை தடுக்கவேண்டும், இது தேவை இல்லாத காட்சிகள். அந்த அடிவாங்கும் காட்சியில் ஒரு அய்யங்கார் வந்தால், கமல் ஏற்றுக் கொள்வாரா.... இந்த அய்யர் மாரின் ( கமல், திரிஷா இருவருமே ) கொட்டம் எப்போது அடங்குமோ !!!

    ReplyDelete
  5. \\முகமூடி said...//
    ஐயா ஏற்கணவே ஈழதமிழன் நிசத்தில் அதிகமாக அவமானங்கள் சந்தித்து உள்ளார்கள். இதுபோல திரைபடத்திலும் அவமானபடுத்த வேண்டம். உங்கள் திமிறை வேறு இனத்தின் மீது காட்டவும் அப்போது தெரியும் உங்களுக்கு.

    ReplyDelete
  6. \\முகமூடி said...//

    \\Anonymous said...//

    ஐயா அனைத்து இனத்திலும் காட்டிக்கொடுப்பவர்கள் , கூட்டிக்கொடுப்பவர்கள்,பிழைப்புவாதிகள் உள்ளார்கள் அவர்களை ஒதிக்கி வைத்து உள்ளளோம் அதைதான் இப்போதும் வேண்டுகிறோம்....

    ReplyDelete
  7. \\ANKITHA VARMA said...//

    உனர்வுக்கு நன்றி....

    ReplyDelete