Monday, January 10, 2011

தமிழ் இனபோராளி போர்வையில் ஏமாற்றும் சீமான்

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்..,
முண்டாசு கவிஞன் பாரதியின் வரிகள் இன்றும் இந்த கேடு கெட்டவனை, " போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவின் கைக்கூலியை",
நினைத்து பாடப் பட்டதோ???

பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் தரவேண்டும்!,
பிரபாகரனை தூக்கிலிடவேண்டும்!,
விடுதலைபுலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும்! என சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் இயற்றியவர் தான் ஜெயலலிதா என்னும் அரசியல் வியாபாரி!
இலங்கையில் சந்திரிகா, ராஜபக்சே-வுடன் சேர்ந்து ஈழ  தமிழனின் நெஞ்சிலே அறிக்கைகளால் வேல் பாய்ச்சியவர் தான் இந்த ஜெயலலிதா!
அங்கே ராஜபக்சே-வின் விமானங்கள் குண்டு மழை பொழிந்த போது,
" போர் என்றால் குண்டு மழை பொழியத்தான் செய்யும், மக்கள் சாகத் தான் செய்வார்கள்!" என அறிக்கையால் ஈழக் தமிழனின் குருதி குடித்தவர் ஜெயலலிதா!
இங்கே கேடுகெட்ட சாத்தான் காங்கிரசின் ஆதரவுக்கு முயற்சித்து கிடைக்காத வேளையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக,
தமிழகத்து தமிழனை முட்டாளாக்க..,! வோட்டு வாங்க..,
ஈழத்தமிழனுக்கு ஆதரவு என்னும் நாடகத்தை வெறும் இருபது நாட்கள் மட்டுமே தேர்தல் மேடைகளில் நடித்த முன்னாள் நடிகை ஜெயலலிதா!
தேர்தலுக்கு பின் ஈழ தமிழன் இருக்கிறானா??? செத்தானா? என்று வெத்துவேட்டு வைகோவும், நெடுமாறனும், தா பாண்டியனும், வரதராஜனும், ராமதாசும் இன்னும் சொல்லவில்லையாதலால்,
ராஜபக்செவிடமிருந்து ப. சிதம்பரம் மூலம் அறிந்து சொல்ல,ஆட்சிக்காக இனப் படுகொலையை கண்டு கொள்ளாத,  முன்னாள் தமிழின தலைவர் கருணாநிதியும் தவறியதால்,
மே 18 , 2008 -க்கு பிறகு அதை பற்றிபேசாத "ஈழத்தாய் ஜெயலலிதா!". 
இப்படியெல்லாம் தமிழ் உணர்வு, ஈழத்தமிழனுக்கு ஆதரவு என வோட்டு வாங்க தமிழகத்து தமிழனை, ஈழத்தமிழனை  ஆதரித்த கன்னடத்து "வைரம்"புகழ்-பைங்கிளி, முன்னாள் நடிகை ஜெயலலிதாவை,

தமிழ் இன தலைவன் பிரபாகரனின் முன்னாள் தம்பிகள் வைகோவும், சினிமாக்காரன் சீமானும்,
வரும் தேர்தலில் ஆதரித்து, அவர்களின் சின்னத்திற்கு வோட்டு கேட்டு, அவரை வெற்றி பெறச் செய்ய போகிறார்களாம்!
இன்றைய இந்த முன்னாள் தம்பிகள் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களின்  கேள்வி: கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா?
பதில்: இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி. 
 
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது கடைசிக்கட்டத்தில்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது..,

ஒருவேளை இவர்கள் பிரசாரத்தால்,
இவர்களின் விடிவெள்ளி தலைவி, "ஈழத்தாய் ஜெயலலிதா!". தமிழகத்தில் வெற்றி பெற்றால்?? இலங்கையில் எப்படி தமிழ் ஈழம் அமையும்??
 "ஈழத்தாய் ஜெயலலிதா!". அதற்கு  ஆதரவளிப்பாரா?
இல்லை " என் ஆட்சியில் ஈழம், தமிழ் உணர்வு என பேசக் கூடாது"-என  பழைய குருடி கதவை திறடி என "ஈழத்தாய் ஜெயலலிதா!". ஆணவத்தோடு அபூர்வ சகோதரர்கள் உங்களை தூக்கி மீண்டும் பொடாவிலோ, தடாவிலோ போட்டால், ஜெயில் கலி தின்ன வைத்தால், உங்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கும் மூடத் தமிழகத்  தமிழர்களின் கதி?   பின் ஈழத்தமிழர்களின் கதி?
அடுத்த தேர்தலில் நீங்கள் புதிதாய் முளைக்கும் ஒருவரிடம் இதே போல காசு வாங்கிக் கொண்டு, (இலங்கை- புலம் பெயர் தமிழரிடமிருந்து வரும் காசு நின்று விட்டதால்), அவருக்கு வோட்டு போட சொல்லி, அப்போது ஜெயலலிதாவை வசை பாடுவீர்கள்?  உங்கள் வாழ்க்கை வளமானது தான் மிச்சம்! பின்னால் திரளும் மூடர்களின் நிலையோ ஐயோ! சொச்சம்!
--
வெற்றி பெறும் வரையே கூட்டணி?
வோட்டு வாங்கும் வரையே ஈழம், தமிழின ஆதரவு?
தேர்தல் வரையே ஈழம், தமிழின ஆதரவு?
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்ய துணிந்தவர் ஜெயலலிதா என்பது டிசம்பரில் கர்த்தருக்கு கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடினார்!
நேற்று அய்யா வைகுண்டருக்கு மரியாதை செலுத்தினார்?
தேர்தல் ஆண்டில் மட்டுமே ரமலான் நோன்பு திறப்பார்??? கதை சொல்லுவார்?
தேவர் ஜெயந்திக்கு போவார்?
மீதி நேரங்களில் ...???
பின் யாரையும் மதிக்காதவர், மதிக்க தெரியாதவர் இந்த ஜெயலலிதா என்பது இன்னுமா பிரபாகரனின் இந்த முன்னாள் தம்பிகளுக்கு தெரியவில்லை?
2001 -தேர்தல் வெற்றிக்கு பின் நடந்ததை இவர்களின் முன்னாள் கூட்டாளி ராமதாசை கேட்டால் பக்கம் பக்கமாக சொல்வாரே?
1991 -இல் ராஜீவ் காந்தி மரணம் என்னும் கோர அரசியல் விபத்தால் முதல்வரான ஜெயலலிதா பின் வாழப்பாடி ராமமூர்த்தியையும், மூப்பனாரையும் மதித்த வரலாறு மறந்ததா?
1998 -இல் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு, அரசியல் மறு வாழ்வு கொடுத்த இதே வைகோ, அண்ணன் பிரபாகரனையும், விடுதலைபுலிகளையும் ஆதரித்து பேசியதாக "பொடா" மூலம் 18 மாதம் ஜெயில் கலி தின்றதும்,  இப்போது மறந்துவிட்டதா?  
பெரியவர் நெடுமாறன் "பொடாவில்'' சிறை சென்றதும் மறந்துவிட்டதா? இல்லை., அவருக்கு வயதாகி விட்டதால் அவர் இடத்தை நிரப்ப வந்து விட்டானா இந்த சினிமாக்காரன் சீமான்??
இவற்றையெல்லாம் கண்டிக்க, தட்டிக் கேட்க அண்ணன் பிரபாகரன் இல்லை என்கிற தைரியமா?
 
மானம் கெட்ட மடையர்களே!!!  
சோற்றில் உப்பை போட்டு தின்கிறீர்களா? வேறு ஏதாவது..,?

 ஆட்சிக்காக இனப் படுகொலையை கண்டு கொள்ளாத
 கருணாநிதி, MGR தொடங்கி..,
முப்பது ஆண்டுகளாய் ஈழத் தமிழர்களுக்காக,  தமிழ் இனப்போருக்கு ஆதரவு என்ற பேரில் ஏற்கெனவே நிறைய பேர் அரசியல் வியாதியாகி!!!,
எங்களை முட்டாளாக்கியது போதும்!

முதலில் தமிழகத்தை முன்னேற்ற வழி சொல்லுங்கடா??? முண்டங்களே?? மூலிகளே?

தமிழ் இனம் இனம் என்று பேசிப்பேசியே உணர்ச்சி வசப்படுத்தி,
காரியத்தை கெடுத்து, எங்கள் வாழ்வையும் கெடுத்து,

உங்கள் அரசியல் வாழ்க்கை தான் வளமானது.

ஈழத்தமிழனின்  வாழ்வும் உயிரும் வீணானது தான் மிச்சம்!

உங்கள் அரசியல் வாழ்க்கையே தமிழ் இனம் போட்ட பிச்சை!

படுத்தாதீர்கள் தமிழ் இனப் போரை கொச்சை!

தீர்ந்ததா உங்கள் பதவி இச்சை??

பத்திரம் உங்கள் கச்சை! (வாங்கிய பணம்)!

தாங்குமா ஈழம்!
வைகோ, நெடுமாறன், திருமா வரிசையில்...... எங்களை முட்டாளாக்கியது போதும்!
போராளி என்ற போர்வையில்..,அரசியல் வியாதி -சீமானும்!

தாங்குமா ஈழம்!

மீளுமா மிச்சம் உள்ள என் தமிழ் இனம்!
 
போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை அந்த முத்துக் குமாரின் ஆவி உன்னை சும்மா விடாது..??

போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை, ஜெயலலிதாவின் கைக்கூலியை அந்த தமிழினத்தலைவன் பிரபாகரனின் ஆவி சும்மா விடாது..??


போராளி என்ற போர்வையில்.., ஏமாற்றும் சீமானை,
"போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று சொன்ன  ஜெயலலிதாவின் கைக்கூலியை அந்த மாண்ட ஈழத்தமிழர்களின் ஆவி சும்மா விடாது..??

நன்றி: http://saigokulakrishna.blogspot.com/2011/01/blog-post_10.html

4 comments:

  1. பதிவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  2. சாட்டையடி, சிந்திக்குமா தமிழகம்?

    ReplyDelete
  3. @ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

    நன்றி............

    ReplyDelete
  4. antho parithaabam !
    thamizh naatil namakku kidaitha erandu "maaperum" thalaivargal:
    1.eezha thamizharkaluku virothamana Jayalalitha
    2.eezha thamizharkalai kaati kodukkum Karunanindhi.

    Thamizharin niranthara matrum ghurara yethiri Congressuku kondattam thaan:
    Thamizh Nattu Thamizharkaluku thindaattam thaan !

    ReplyDelete